Friday, July 20, 2007

ஆன்மாவும் உயிரும் ஒன்றா...?

On 7/20/07, Sankar Kumar wrote:

மேலே தொடரும் முன் ஒரு வேண்டுகோள்!

ஆன்மாவும், உயிரும் ஒன்றா?

வெவ்வேறு என நான் கருதுகிறேன்.

உங்கள் பதில் கண்டதும் என் கருத்தைச் சொல்கிறேன்.

>>>>>>>>> ரிஷியின் பதில்......



பொதுவாக ஆன்மீகத்தில் ஆன்மா என்பது வேறு; உயிர் என்பது வேறு என்கின்றோம்.

ஆன்மா என்பது முற்பிறவியைக் கொண்டது என்றும்
மரணத்திற்குப்பின்னால் இன்னொரு பிறவியும் எடுக்கும் வல்லமை கொண்டது என்றும்
ஆன்மா என்றும் அழிவில்லாதது என்றும் ஒரு கருத்தினை சொல்வார்கள்.

இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

இந்தக் கருத்தினை நாம் ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும் கூட ஆன்மா அழிவில்லாதது; ஆகவே ஏற்கெனவே இருந்த ஆன்மாதான் இப்பொழுது பிறவி எடுத்திருக்கின்றது என்று வருகின்றது.

ஆக மொத்த ஆன்மா என்பது ஒரு மாறிலி(Constant). அதுவே வெவ்வேறு மனிதனாய் பிறவி எடுத்திருக்கின்றது... அதாவது உதாரணமாக ஒரு 1000 ஆன்மாக்கள் முதலில் இருந்தது. அது இப்பொழுது பூமியில் ஒரு 1000 மனிதனாய் பிறந்திருக்கின்றது என்பது போலாகும்.

அப்படியெனில் 100 வருடங்களுக்கு முன்னால் இருந்த ஜனத்தொகையும் இன்று இருக்கும் ஜனத்தொகையும் கணக்கிட்டால் இந்த உண்மை புரியும்.
இன்று எத்தனை கோடி உலக ஜனத்தொகை. அப்படியெனில் 100 வருடங்களுக்கு முன்னால் அந்த ஆன்மாக்கள் எங்கிருந்தன...?

ஆன்மீகவாதிகளின் வாதத்திற்கேற்ப இப்படி வைத்துக்கொள்வோம்.

அவரவர்கள் செய்த பாவ புண்ணிய செயல்களுக்குட்பட்டு ஆன்மா வெவ்வேறு பிறவிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது. உதாரணமாக போனபிறவியில் ஆடாக இருந்த ஆன்மா இப்பொழுது மனிதனாய் பிறந்துள்ளது என்ற ஒரு வாதத்தினை வைக்கலாம்.

அப்படி ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் கூட 100 வருடங்களுக்கு முன்னால் இருந்த மொத்த உயிரினத் தொகையும் (அமீபா, ப்ளாஸ்மோடியம் உட்பட) கணக்கிட்டாலும் கூட இன்று இருக்கும் உயிரினத்தொகையுடன் ஒப்பிடும்பொழுது அந்தக் கூற்றும் பொய்யாகின்றது.

சரி அறிவியிலின்படி பார்த்தாலும் கூட,

ஒவ்வொரு உயிரினத்தின் DNA/RNA Pattern வேறுபடுகின்றது. அதனால் ஒரு ஆடு மனிதனாய் பிறக்க வாய்ப்பில்லை. பிறர் பயமுறுத்துவதுபோல் மனிதன் கழுதையாகப் பிறக்க வாய்ப்பில்லை.

அட அவ்வளவு ஏன் இந்த முற்பிறவி, பிற்பிறவி, சொர்க்கம், நரகம் எல்லாம் ஒரே மாதிரியான கட்டுக் கதைகளே...!

உயிர் என்பது ஒரு Closed Circuit of Bio-Magnetism. இந்த Circuit Break ஆகும்பொழுது மனிதனின் உயிர் பிரிகின்றது என்கின்றோம்.

விபத்தினால் இறந்தவர்களுக்கு அந்த Circuit Break ஆனாலும் கூட அந்த Bio-Magnetism பிரபஞ்சத்தில் கலக்கமுடிவதில்லை.... அது கரையும்வரை அது விண்ணில் இருக்க வேண்டியுள்ளது... இதைத்தான் ஆவி என்கின்றோம்...

சரி அப்படியென்றால் பாவம் செய்பவனுக்கும் நல்லது செய்பவனுக்கும் ஒரே மாதிரிதானே இறைவன் நடத்துவான்...?

உண்மையில் நல்லது என்றும் அல்லது கெட்டது என்றும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. Heat ல் எப்படி 0 டிகிரி செல்சியஸ் என்பதுவும் ஒரு வெப்பமோ... 100 டிகிரி செல்சியஸ் என்பதுவும் வெப்பமோ... அது போல...

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான விளைவு உண்டு.

நீங்கள் ஒரு பூங்காவில் நடக்க்கின்றீர்கள். அப்பொழுது அங்கிருக்கும் ஒரு பூவைப் பறிக்க நினைக்கின்றீர்கள். இந்த எண்ணம் கூட வான் காந்தத்தில் ஒன்றும் உங்கள் கருமையத்தில் ஒன்றும் பதியப்படுகின்றன. அவை வலிமையானால் செயலுக்கு வந்து விளைவினை ஏற்படுத்தாமல் போகாது...

இப்படித்தான் ஒரு புலியின் எண்ணத்திற்கு மான் பலியாகின்றது. ஒரு கொலைகாரனின் எண்ணத்திற்கு எத்தனையோ நல்லவர்களும் பலியாகின்றனர். ஆனாலும் செயல் விளைவுத் தத்துவத்தில் அவனுக்குத் தக்க தருணத்தில் இயற்கை தண்டனை அளிக்கின்றது... தண்டனை என்பதைவிட எண்ணத்திற்கேற்ப ஒரு விளைவினை நிகழ்த்தி அதற்கு இன்னொரு விளைவினை நிகழ்த்துகின்றது. அது அவனுக்கு எதிராக இருக்கும்பட்சத்தில் தண்டனை என்கின்றோம்...

சட்டத்தினை ஏமாற்றலாம். ஏன் நீதிபதியே கூட நீதியின்றி நடக்கலாம்...ஆனால் இயற்கையின் முன்னால் யாரும் தப்பிவிட முடியாது. எல்லாம் வான்காந்தத்தில் பதிவு ஏற்பட்டுவிடும்...

No comments: